Thursday 25 May 2017

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று

மாணவ பருவம் என்றும் இனிமையானதே, அதிலும் கல்லூரிக் காலம் போன்ற பொன்னான நாட்கள் நமக்கு கிடைத்திருந்தால் அது வரமே. கல்லூரி படிப்பிற்கு பின் என்ன செய்ய போகிறோம் என்ற ஒரு கேள்வியோடு உள்நுழைந்து அதற்க்கு விடையுடன் வெளிவந்தால் அதைவிட இனிமை எதுவும் இருக்க முடியாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை கடைபிடித்தால் கல்லூரியை விட்டு தன்னம்பிக்கையோடு வெளி வரலாம்.


1) ஆங்கில வழி உரையாடல் சரளமாக பேச தெரிந்துகொள்வது பல வழிகளில் உதவும். உங்களை பற்றி (Self Introduction) சொல்லச் சொன்னால் குறைந்தது 1 நிமிடம் தங்கு தடையின்றி ஆங்கிலத்தில் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். இந்த இணைப்பில் சில உதாரணங்கள் உள்ளது (HOW TO GIVE SELF INTRODUCTION IN ITERVIEW). அதோடில்லாமல் உங்களுக்கு பிடித்த பாடம் (Favorite subject) பற்றி பேசச் சொன்னால் 5 நிமிடங்கள் பேசுமளவிற்கு ஆங்கிலத்தில் தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். இவை நேர்காணலின் (Interview) போது  உதவும்.

2) கணிப்பொறி சார்ந்த ஏதாவதொரு course சென்று certificate வைத்திருப்பது நல்லது. தற்போதைய trend ல் உள்ள ஒரு Computer Language அல்லது Basic Computer Course தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பு.

3)  Inter college competition, Summer Internship மற்றும் Conference போன்றவற்றில் பங்கேற்பது மிக  மிக அவசியம். நிறைய நட்பூக்களும்,  தொடர்புகளும்  கிடைக்கும். நமது Resume value உயரும். Summer Internship தேடுதலுக்கு உதவ தனி இணைய தளம் உள்ளது  

http://www.twenty19.com/
  
இந்திய மாணவர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கிடைக்க கூடிய scholarship/loan  விபரங்கள்  பற்றிய தகவல்கள் 

https://www.scholarshipsinindia.com/ 
http://www.scholarships.gov.in/ 
http://mhrd.gov.in/scholarships-education-loan 
http://scholfin.com/ 
http://www.motachashma.com/ 
https://www.topuniversities.com/ 
https://www.wemakescholars.com/ 

4) College Seniors உடன் என்றும் தொடர்பில் இருங்கள். வேலை நிலவரம் பற்றிய தகவல்கள் மற்றும் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கு உதவியாய் இருக்கும். 

5) முடிந்தால் Part time job ஒன்று செய்ய முயற்சி செயுங்கள்.

6) இந்த துறைக்கு அல்லது இந்த பணிக்குதான் செல்வேன் என ஒரு குறிக்கோள் வைத்து வேலை செய்யுங்கள் / படியுங்கள். மனதளவில் இயங்கி கொண்டே இருக்க இந்த குறிக்கோள் உதவும். கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம் அல்லது முதல் ஆறு மாதம் இந்த குறிக்கோளை தேர்ந்தெடுக்க பயன்படுத்தி கொள்ளுங்கள்.

7) Extra curricular activities like Sports, Singing, Playing  instruments, Drawing, Martial Arts, Swimming, Trekking, Poem writing, Learning new language, etc..  இப்படி உங்களது கவனத்தையும், படைப்பாற்றலையும், சக்தியையும் கோரும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருப்பது அவசியம். 


இன்றைய நிலை: 
 
முடிந்த வரை On campus / Off  Campusல் வேலை பெற முயற்சி செய்யுங்கள்

Reference இல்லாமல் சொந்த முயற்சியில் வேலை கிடைப்பது  சிறிது கடினம். 

கொஞ்சம் பொறுத்திருந்தால் / முயற்சி செய்தால் consultancy மூலமாக வேலைக்கு சேரலாம்  ஆனால் 3-4 மாத சம்பளத்தை consultancyக்கு நாம் கொடுக்க வேண்டும். 

நீங்கள் விரும்பிய வேலை  கிடைக்கவில்லை என்றால் காத்திருங்கள் அல்லது கிடைத்த வேலையில் சேர்ந்து விரும்பிய வேலைக்காக முயற்சி செய்துகொண்டே இருங்கள். முயற்சி வெற்றியை தரும்.

இது எனது/என்னை சுற்றி நடந்த அனுபவம், அதாவது average middle class மாணவர்களின் நிலைமை. இந்த சூழ்நிலை உங்களுக்கு வரலாம் வராமலும் போகலாம். ஆகவே பயப்பட ஒன்றுமில்லை, இலக்கு வைத்து செயல்படுங்கள். இழக்க ஒன்றுமில்லை உங்களிடம்  (மாணவர்களிடம் ), இந்த உலகில் அடைய நிறையவே இருக்கிறது. 

தொடர்புடைய பதிவுகள்:
WHAT AFTER 10 & 12?  
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும் 
உயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள் 
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! 
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்  
நவோதயா பள்ளிகளின் சிறப்புகள் 
பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS) 
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?  



2 comments:

  1. அருமையான அவசியமான பதிவு
    பகிர்ந்த விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்க்கும் நன்றி ஐயா

    ReplyDelete

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...